anaiyuran

அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே!

அழுது நீ கோழையாகாதே!
உனக்கு நண்பன் நீயே!
உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்?
நீயே உன் காவலன்….
ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்!
ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே….!
* இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு.
* ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது..
* இழப்பு அல்லது பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை.
* நிஜங்கள் பலவற்றை கண்ணெதிரே தொலைத்து விட்டு இருளெனும் கனவில் தேடுகிறேன். நீண்ட நாட்களாக, பல மாதங்களாக, சில வருடங்களாக….
* கல்லைச் சலவை செய்யும் மழையே இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை செய்து விட்டு செல்வாயா?.
* கோபம் வருகின்ற பொழுது வார்த்தையின் அளவுகள் அதிகரிக்கின்றன. அன்பானவர்களைக்(அன்பானவரைக்) கூட எதிர்த்து விடுகின்றது..
* கெட்டவனாக இருந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பதைவிட.. நல்லவனாய் இருந்து கெட்ட பெயர் எடுப்பது எவ்வளவோ மேல்..
* தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன்(மகன்) வழிதவறான்.
தாயின் அன்பு இல்லையானால் தனபதியாய்(குபேரன்) இருந்தும் பயன் இல்லை.
* வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்