anaiyuran

என் இளமையின் கனவுகளை திருடியவளே

என் இளமையின் கனவுகளை திருடியவளே..

என் இருதய ஓசையை வருடியவளே..

தேயாத நிலவாய் என்னுள் நிலைத்தவளே..

வாடாத பூவாய் தினம் தினம் மலர்பவளே.

விலகிடாத நேசத்தை உன் மீது நான் வைத்தேன்..

வாலிப தென்றலாய் உனை வருடி நான் மகிழ்ந்தேன்..

தீராத ஊடலும் தேன் சிந்தும் காதலும் மாறாது என்னிடம்..

மகிழலாம் தினம் தினம்..