பறவைகள் அழுவதில்லை
பரவசமாய் பறப்பதினால்
விலங்குகள் புலம்புவதில்லை
விலங்கிடாமல் இருப்பதினால்
நிற்கும் குளம்நீர்
நெருப்பாக கொதிக்கலாம்
ஓடும் நதிநீர்
ஒருபோதும் சுடுவதில்லை
சிறயைவிட கொடியது
அறைக்குள்ளே கிடப்பது
சொர்க்கத்தைவிட இனியது
சுற்றுலாவில் இருப்பது
கண்களுக்கும் பசியெடுக்கும்
காட்சிகளை உணவாக்கு
கல்லீரல் நூரையிரலுக்கு
புதுக்காற்றை விருந்தாக்கு
கண்கள் இன்புற்றால்
இதயமும் இன்புறும்
காட்சிகள் மாறாதிருந்தால்
கண்களும் சோர்வுறும்
இதயம் இன்புற
இடமாற்றம் அவசியம்
பயணத்தில் பதுங்கியிருக்கு
மகிழ்ச்சியின் ரகசியம்
என்றும் எழுத்தாணி முனையில்