சிறகடிக்க சீரிய
வானம் இருந்தாலும்
பறக்கும் சிந்தனைதான்
வானில் நம்மை வட்டமிட வைக்கும்!
திறக்க பலபல
கதவுகள் இருந்தாலும்
திறப்பதற்கு தைரியமில்லை
எனில் நுழைவது எப்படி?
எல்லாம் இருந்தும் வெற்றி
கிட்டாமல் எப்படி போகும்?
நமக்கு இல்லையேல்
இவ்வுலகில் தகுதியானவர்
ஒருவர் உள்ளனரோ?