காதலும் வரும் மோதலும் வரும்
கள்ளவழி சேருகிற காசுப்பணமும் வரும்
கற்பனைக்கு செல்வதில்லை கையெழுதி வைப்பதில்லை
ஒப்பனையும் பார்ப்பதில்லை ஒருமுடிவும் சேர்ப்பதில்லை
அற்ப இரவுதனில் அலைவரிசை வருகிறது
ஆழ்ந்த உறக்கத்தில் அத்தனையும் பதிகிறது!
இன்பம் துன்பமென இருவழியும் திறந்தபடி
கண்ணில் விரியும் கனவுகளைக் காணுகிறோம்
எண்ண விரிவுக்கு ஏற்பஒரு திரைப்படமாய்
கண்ணில் நிழலாடும் காவியப்பூ பந்தலென!
காதலும் வரும் மோதலும் வரும்
கள்ளவழி சேருகிற காசுப்பணமும் வரும்
ஏதெலாம் வந்தாலும் எழுந்தால் கண்ணகலும்
தீதுததுவே வந்தாலும் தீட்டுபோல் கழிந்துவிடும்!
கனவில் வருவதெலாம் கண்ணவிழ்த்தால் விலகிடினும்
மனதிலோர் மயக்கத்தை மறக்காமல் தருவது
கணநேரம் வந்து கண்ணசைத்த காரிகை
நனவிலில்லா போதும் நகருவதேயில்லை பார்!
No Comment! Be the first one.