உன்நினைவு என்னகத்தில் உடும்புப்பிடி–அது
கன்னகத்தில் இரவு தோறும்
கனவுக்கொடி!
கண்ணசைக்க கண்ணாடிபோல் சிதறுதடி –இதயம்
காலந்தோறும் காதலினால் பதறுதடி!
சம்மதத்தை சொன்னாலேது குறையுமடி-நீ
சம்மதித்தால் சரியலாமே உந்தன்மடி!
அம் மனத்தை விரும்பிடுறேன் சொல்லிடடி–இந்த
அம்மான் மகன் தவிப்பதனை
அறிந்திடடி!
ஒன்றிநீயும் உள்ளத்திலே கரைந்திடடி–என்
உயிர்க்கரையும் காட்சியதை கண்டிடடி!
அன்றில்போல அமைத்திடுவோம் அன்புகுடில்–அது
இன்றுநாளை என்றில் லாது
இலங்கும் என்று மெழில்!