பனிதோய்ந்த மார்கழி பயணம் போக
நனிகொண்டு தை நடந்துவரும் நன்னாள்
இனிநமது இன்பமே இலக்கு மண்ணில்
இடறில்லை இந்நாளில் இனிப்புச் செய்தி!
பொங்கலிடு பொழியட்டும் பாலும் பொங்கி
புதுமஞ்சள் புதுப்பானை புத்தரிசி சேர்த்து
தங்களில்ல அடுப்பேற்று தரணிப் போற்ற
தைப் பொங்கல் ததும்பட்டும் தமிழர்வாழ்வில்!
வர்த்தகமும் தொழிற்துறையும் வளமே காண
வயற்பரப்பில் வளைந்தாட செந்நெல் கதிரும்
அற்புதமாய் அறவாழ்வு அகிலம் காண
அன்றன்றும் உழைத்திடுவோம் அடைவோம் வெற்றி!
நாமடையும் மகிழ்ச்சிக்கு நற்முன் னோட்டம்
நன்னாளே பொங்கல்விழா
நாலு நாளும்
தேமதுர வாழ்த்துகளை தேடிச் சொல்லி
நாமணக்க நம்முறவை நனைப்போம் நன்று
தை திருநாள் நல் வாழ்த்துக்கள்
No Comment! Be the first one.