உயிரின் உயிராய் உயிர்களின் ஒளியாய்
ஒன்றிய தேவ மாதா–அவள்
உயர மறிய உலகால் இயலா
உறைந்தாள் காண தோதா(ய்)
அரியவை காண்பதே அரியவை யாகும்
அன்னையும் அப்படித் தானே–அந்தப்
பெரியவள் பெருமையை பிறரிடம் பேசிட
பெய்திடும் நாவினில் தேனே!
ஒன்றற ஒன்றி உயிருக் கருளும்
ஒன்றே அவளது மூச்சு-நாம்
இரண்டற கலந்தால் இனிமை சேரும்
எதற்கு வீணே பேச்சு!
நன்றறம் நமக்குள் நனிசிறந் தோங்க
நமக்கருள் புரிவாள் வருக!–அந்த
நம்பிகை கொண்டு நாடிநீ வந்து
நாளும் தேவையைப் பெறுக!
ஆனையூரான்
No Comment! Be the first one.