உன் அருகாமையில் என்
கர்வம்தனை புதைத்துவிட்டு.
என்னை அணைத்தே துண்டு
துண்டாய் சிதைத்துவிட்டு.
என்னை முழுதுமாய் குழைத்து
கண்மையாய் கரைத்துவிட்டு.
விரலினால் தீண்டி என்
விரதங்கள் தீர்த்துவிட்டு.
உன் கொலுசாய் என்
இதயத்தையே துடிக்கவிட்டு.
கரங்களில் என் முகமேந்தி
காலமெல்லாம் வெடிக்கவிட்டு.
மடிந்து நான் விழுகையில்
மடிதனை தந்துவிட்டு.
நான் வீடுதிரும்பும் பொழுதுகளில்
வாசலுக்கு வந்துவிட்டு.
உயிரெல்லாம் உயிர்த்து இருக்கும்
உன்னத தோழியே!
பிரிவில் செல்லமாய் கொன்று
பிரியுது ஆவியே!
எப்போதடி வரப் போகிறாய்?
அணுஅணுவாய் என்னுள்
ஆராய்ச்சிகள் செய்ய.
அன்பால் ஆயுளெல்லாம்
அகத்தை கொய்ய
2013 . 8 . 2
No Comment! Be the first one.