ஆழ்ந்த உறக்கம் ஆசை விலக
ஆங்கொரு சொர்க்கம் கனவினிலே
ஏழ்மை யில்லை இளமை முதுமை
என்று மில்லா நிலையினிலே!
போட்டி யில்லை பொறாமை யில்லை
புகழ இகழ எவருமில்லை
காட்டிக் கொடுக்கும் கயவ ரில்லை
கசப்பு இனிப்பு எதுவுமில்லை !
இன்று பிறந்த இனியப் பொழுது
இதற்கு நிகரு ஏதுண்டு
என்றும் இதுபோல் இருந்து விட்டால்
எங்கே வாழ்வில் பழுதுண்டு?
ஆழ்ந்து உறங்க அத்தனை இன்பம்
அனுபவித்தாலே அது புரியும்
வாழ்ந்த அனுபவ வழியைக் கொண்டு
வழங்குது பாரு என்னறிவும்!