உள்ளம் தவித்ததடி உள்மனது வலித்ததடி
முள்மேல் நிற்பதுபோல் முனகல் வெடித்ததடி
எல்லாம் வெறுத்ததடி இதயத்தில் நூறுஅடி
சொல்ல இயலாத சோகமொன்று வந்ததடி!
காத்திருந்த நேரமதில் காலம் கழிந்ததடி
காணாத உனையென்னி கற்பனைகள் உதிர்ந்ததடி
ஆத்திரமோர் மூலையிலே அனலாக கொதித்ததடி
ஆனாலும்நீ வருவாயென ஆசைவழி பார்த்ததடி!
மாலை ஒளிந்ததடி மதிமயங்கி வீழ்ந்ததடி
வேளையுணந்த வண்ணம்
விண்ணில் நிலாவந்ததடி
சாலைஒலி ஓய்ந்ததடி சரிந்துபனி பூவின்மடி
நீள இரவுவர நெஞ்சுதனும் வெந்ததடி!
ஏமாற்றம் நிறைந்தபடி இருள்நீண்டு ஏறுதடி
என்னசெய என்றபடி என்கைகள் பிசையுதடி
மாமான்னு நீவந்து மலர்முகத்தை காட்டாது
மனங்கனத்து நின்றகதை மதிநிறைந்து உள்ளதடி!
No Comment! Be the first one.