போதனையிலும்
கிடைக்காத ஞானம்
வேதனையில்
கிடைக்கும்
சில நேரங்களில்
சிறப்பான
விடைகளை விட
சிந்திக்க வைக்கும்
வினாக்களே
அறிவை வளர்க்கும்
விளகிய பிறகு
விளக்கங்கள் எதற்கு
வேண்டாம் என்ற பிறகு
விவாதங்கள் எதற்கு
கற்கண்டும்
கல் தான்
ருசிக்காத வரைக்கும்
வாழ்க்கையும்
இனிமை தான்
வலியினை உணராத வரைக்கும்
நல்லவராய் இருப்பது
நல்லது தான்
ஆனால்
நல்லது கெட்டது தெரியாத
நல்லவராய் இருப்பது
நல்லதல்ல
பக்குவம் என்பது
காயப்படுத்தியவர்களை
காயப்படுத்த வாய்ப்பிருந்தும்
காயப்படுத்தாமல்
கடந்து செல்வதே
தேடி அலைந்து
கொண்டே இரு
வேண்டியது கிடைக்கும் வரை
அது உன் அருகில் இருந்தால்
அதிர்ஷ்டம்
தூரத்தில் இருந்தால்
நம்பிக்கை
கிடைக்காமல் போனால்
அனுபவம்
தண்ணீரை போல்
இருங்கள்
அதனால்
ஒதுங்கி செல்லவும் முடியும்
உடைத்தெறியவும் முடியும்
படிப்பறிவை விட
மேலானது
வாழ்க்கையில் சிலரால்
படும் அறிவு
கவலைகள்
எங்கிருந்து வரும்
என்று தெரியாது ஆனால்
புன்னகை நம்மிடம்
தான் உள்ளது
இல்லமோ உள்ளமோ
கண்டதையும் நிரப்பினால்
இடைஞ்சல் தான்