வாழ்க்கையில் உயரும் வரை காதைப்
பொத்திக் கொள்.
உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்.
பறவைகளின் நிம்மதியை கெடுக்க
ஒரு கல் போதும்.
மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு “சொல்” போதும்!
எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு
மெழுகுவர்த்தி போலத்தான்.
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் பிரகாசமாக தான் தெரியும்.
அருகில் சென்று பார்த்தால் தான் அவர்கள்
உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்!
வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை.
பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை!
அனைத்திற்கும் நாம தான் காரணமென பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.
எதையாவது கொடுத்து நல்ல பெயர்
தொடர்ந்து வாங்க நினைத்தால்.
அதை கொடுக்கும் வரைதான் நிலைக்கும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு!
மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு!