காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை!
அது நம் மனதை பக்குவபடுத்துகிறது
வாழ்க்கையில் ஏற்படும் இருளை,
புன்னகையுடன் கடந்து செல்.
வாழ்க்கை பிரகாசிக்கும்!
ஒருவரையும் குறைத்து மதிப்பிடவோ
காயப்படுத்தவோ வேண்டாம்!
இன்று வலிமையும், அதிகாரமும் உள்ளவனாக இருக்கலாம்!
ஆனால் காலம் அதிக வலிமையுடையது.
சிறு சிறு நீரோட்டங்கள் தான் நதியை உருவாக்குகிறது,
சிறு சிறு போராட்டங்கள் தான் நம் வாழ்க்கை உருவாக்குகிறது!
நாம வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய நல்ல மாற்றங்கள் எல்லாம்,
நாம் அதிகம் நேசித்த ஒன்றை இழந்த பின்பே நடந்திருக்கும்!
போதிக்கும் போது புரியாத பல விஷயங்கள், பாதிக்கும் போது புரியும்!
வேண்டாம் என்று கூறினாலும்,
கற்று கொடுப்பதை நிறுத்துவதில்லை வாழ்க்கை,
வாழ்வது எப்படி என்று…
வாழ்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை.
ஆனால் வந்த எதுவும் ஒரு பாடம் கற்றுத்தராமல் போவதில்லை!