anaiyuran
anaiyuran

மதிக்குள் தெளிவு மலரும் நாளில்

 

இன்பம் இன்பம் என்றொரு போதையில்
இளமைக் கழிப்பு பலநாளும்
துன்ப மெண்ணாது துணை யுடனிருந்து
தூக்கத்தை கலைத்தல் சிலநாளும்!

அன்பெனும் பிடியுள் அடங்கிய இன்பம்
அகல அகல அது தோறும்
தன்பிடி யிருந்த தக்க யிளமை
தனதறியாது வெளியேறும்!

மேனிக் கரைய மிகுநோய் நுழைய
மேயும் கண்ணின் ஒளிபோகும்
ஆனி வேராய் ஆன உயிரது
ஆட்டமாட வலி மேவும்!

விதிக்குள் சிக்கிடும் விதியு முண்டு
விலக்கிலை எவரும் அறியாரே
மதிக்குள் தெளிவு மலரும் நாளில்
மண்ணி லவரும் இலைபாரே!